Wednesday, June 5, 2013

தமிழ் உலகின் முதல் மொழி

தமிழ் இலக்கியங்களில் சில 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால் இது மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம்இ கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும். 

இந்தியாவை பொறுத்தவரை சிந்துவெளி நாகரீகம் மிகவும் பழமையானது என்கிறது வரலாறு.அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது. 

சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான். 

குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான். லெமூர் என்றால் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம வளர்ச்சி என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது. 

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் 

49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள்.பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். 

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு 
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா 
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா 
4. தொலை கிழக்கில் – சீன நாடு 
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர் 
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர் 

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். 

ஆதாரங்கள் ............. 

ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும். 

தமிழ் தான் உலகின் முதல் மொழி....!!! 

Monday, June 3, 2013

ஊமை உலகம் உருவாகட்டும்

<script type="text/javascript">
var font_color="#444235";
var font_style="Arial, Helvetica, sans-serif";
var font_size="11px/25px";
var bg="#CFD0D2";
var t_width="400px";
var t_height="500px";
var kid=116876;
</script>
<script language="JavaScript" src="http://eluthu.com/user/getkavithai.js" type="text/javascript"></script>

உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா அப்போ இது உங்களுக்குதான்


எனக்கு மட்டும் ஏன் இப்படி ?


Sunday, June 2, 2013

நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் உண்டா

நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் உண்டா .....
...இன்று ஹிந்து மதத்தை எதிர்பவர்கள் எல்லோருமே தன்னை பெரியார் போலவே பாவிக்கின்றனர் பெரியார் செய்தது ஒரு புரட்சி அது அந்த கால கட்டத்துக்கு தேவையானது இதில் எனக்கு சந்தேகமில்லை ஆனால் அந்த கேள்விகள் இன்னும் பிடித்து தன்னால் சிந்திக்க பட்டது போலவே காட்டி கொள்ளும் போக்குடயவர்களுக்கு மட்டும் இந்த கேள்விகள் ......... 

ஹிந்து மதத்தை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் ......... 

1.ஹிந்து மதத்தை பலிக்கும் துணிச்சல் நீங்கள் ஹிந்துவாக இருப்பதால் மட்டுமே , இதற்கான உங்கள் பதில் ? 

2. மத ஒழிப்பு என்று சொன்னால் எத்தனை மதங்கள் இருக்கிறது அதனை குறித்தும் விமர்சிக்க முடியுமா, தைரியம் உண்டா ? 

3. ஹிந்து மதத்தை குடைவது மட்டுமே நோக்கம் என்றால் ஏனைய மதங்களை நீங்கள் ஏற்கீறீர்களா அதனால் பிரிவினை வராது என்பதை உங்களால் நிருபிக்க இயலுமா ? 

4. ஆர்யர் -திராவிடர் என்பது உங்கள் பிரச்சனை என்றால் அதனை தீர்க்க ஹிந்து மதத்தை அதன் இதிகாசங்களை தீண்டுவதுதான் நீங்கள் அறிந்த பகுத்தறிவா ? 

5. இன்று பல ஏழைகளின் துடிப்பு அல்லது நம்பிக்கை கடவுள்தான் அவர்களின் பசியை தீர்த்தால் அன்றி பகுத்தறிவை ஊட்ட இயலாது அப்படியிருக்க இதிகாசங்கள் தேவையில்லை என்பது ஏழைகளின் நம்பிக்கையை குலைப்பது ஆகாதா ? 

6. கண்மூடி வழக்கம் மண் மூடி போக சொன்னவரும் இங்கு வாழ்ந்த திராவிட இனத்தை சார்ந்தவர்தான் அவரையும் உங்களால் எதிர்க்க முடியுமா காரணம் அவரும் திருவாசகத்தை கற்று தேர்ந்தவர்,சிதம்பர தரிசன செய்தவர்தான் ? 

7.பாரதி இயற்றிய பாஞ்சாலி சபதத்தின் நோக்கம் ?கண்ணன் கவிதைகளின் நோக்கம் ?இதனை உங்களால் விமர்சிக்க முடியுமா ?(விடுதலை இந்தியா என்று மொட்டையாக முடிக்க வேண்டாம் ) 

8. ரிக் ,யஜூர் ,சாம, அதர்வண ,பகவத்கீதை, ராமாயணம், திருவாசகம் ,கந்தபுராணம் ,எனக் கணக்கில் அடங்கா அனைத்தையும் படிப்பதற்கு இந்த வாழ்நாள் போதாது அப்படியிருக்க ஹிந்து மதத்தை விமர்சிப்பது நுனிப்புல் மேய்ந்த கதைதானே இதனை ஒப்புகொள்கிறீர்களா ? 

9.இழந்த பல கலைகள் பகுத்தறிவால் உண்டானதா அல்லது பரமாத்மாவின் அர்பணிப்பில் உண்டானதா ?அப்படியெனில் கதை ,இலக்கியம், கவிதை,சிற்பகலை ,நாட்டியம் என்று அனைத்தும் பகுத்தறிவில் உண்டாகிவிடும் என்பதை உங்களால் நிரூபிக்க இயலுமா ? 

10. மத ஒழிப்பாளர் என்றால் அணைத்து மதத்தயும் அல்லவா ஒழிக்க வேண்டும் மாறாக ஒரு மதத்தை ஒழிக்க நினைப்பதும் பிரிவினைதானே பிரிவினையை உண்டு செய்யும்தானே? அப்படி அனைத்து மதத்தையும் உங்களால் ஒட்டுமொத்தமாக காலி செய்திடும் வழிகள் உண்டா ? 


நான் நீங்கள் எண்ணுவது போல் ஏதோ ஒரு ஹிந்து அமைப்பை சேர்ந்தவன் அல்ல நான் சாதாரண ஆள் .........எதிர்ப்பது என்று முடிவு செய்து விட்டால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் அதுதான் சரியான எதிர்ப்பு அதை விடுத்து ஒன்றை மட்டுமே எத்ரிப்பது தவறு இதுவும் பிரிவினையை உண்டு செய்யும் என்பதை புரிந்து கொள்ளவே இக்கேள்வி ......இது சாடல் குறித்து அல்ல சிந்திப்பது குறித்து ........ தயவு செய்து சிந்தியுங்கள் பிரிவினைவாதம் பல இருக்கிறது இந்தியாவிலும் உலகிலும் அதனையெல்லாம் குறித்து சிந்திக்கபடவே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் .......எந்த ஒரு மத உணர்வையும் கொச்சை படுத்தாதீர்கள் முடிந்தால் அறிவோடு மதத்தை அணுகக்கற்று கொடுங்கள் ......அறிவால், எதிர்ப்பதை விட அணுகுவதுதான் முறையான வழி அதுதான் எல்லாவற்றுக்கும் தீர்வு மத பிரிவினையும் மறையும் காரணம் எல்லா மதங்களும் சொல்ல வரும் விஷயங்கள் ஒன்றுதான் பாவனைகளும் அதன் மொழிகளும் வேறு என்பதுதான் உண்மை .......மதத்தை வைத்து ஒருவர் பற்றையும் மற்றவர் பிரிவையும் அல்லது ஒழிப்பையும் உண்டு செய்வது நியாயமா ?