Thursday, December 12, 2013

மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம்.

1. மூலிகையின் பெயர் -: மிளகு. 

2. தாவரப் பெயர் -: PIPER NIGRUM.
3. தாவரக்குடும்பம் -: PIPERACEAE.
4. வகைகள் -: மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகைப்படும்.

5. வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம்.

6. பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர் முதலியன.

7.வளரியல்பு -: இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சைனா, மத்திய கிழக்கு நாடுகள் வட ஆப்பிருக்கா விற்குப் பரவிற்று. 16ம் நூற்றாண்டில் ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் மற்றும் மலேசியாவுக்குப் பரவிற்று. மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள் மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். எப்பொழுதும் பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன் நிறம் மாராமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிழகாக சுண்டி சிருத்து மாறிவிடும். இதுவே மிளகாகும். இது கொடி கட்டிங் மூலம் இனப் பெருக்கம் அதிகமாகச் செய்யப்படுகிறது.

4. மருத்துவப் பயன்கள்- “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. தவிர, உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள விடத்தைப் போக்குவது.

விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.

பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தணமிட நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.

பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இதை சித்த மருத்துவத்தில் கொறுக்கு நோய் என்பார்கள். இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கராம் என இரண்டையும் போதிய ஆளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.

சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.

மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.

100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

வெற்றிலை உலர்ந்த வேரையும் மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும்.

அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

இதம் தரும் மிளகு


கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும்.
* அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றைக் குறைக்க மிளகு அருமருந்து.
* உணவில் மிளகைச் சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும். ஏற்பட்டால் குணமாகும்.
* மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைச் சரிசெய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது.
* வெந்தயம் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
* கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் சீதபேதி கட்டுப்படும்.
நாவலும் அவரையும் நல்லது
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
* நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களைச் சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ராசயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.
பருக்களை விரட்டும் வெந்தயம்
* வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும்.
* பாதாம்பருப்பில் வைட்டமின் ‘ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.
* தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட்ஸ் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். இதிலும் வைட்டமின் ‘ஈ' சத்து நிறைந்துள்ளது.

Tuesday, December 10, 2013

தவளை இனப்பெருக்க அழிவால் பரவுகிறது டெங்கு


தமிழகத்தில் தவளைகள் இனப்பெருக்கும் குறைந்ததால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்களின் தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது.
டெங்கு, மலேரியாவுக்குப் பலர் உயிர் இழந்து வருகின்றனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்கள் தாக்கி சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்த வகைக் காய்ச்சல்கள் அனைத்தும் கொசுக்கள் மூலமே பரவுகின்றன. கொசுக்களை அழிக்கும் தவளைகள் இனப்பெருக்கம் குறைந்து அந்த இனமே அழிந்து வருவதால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதற்கு முக்கிய காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து திண்டுக்கல் ராம் நகரைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட உதவி வனப் பாது காவலரும், வன உயிரினங்கள் ஆராய்ச்சியாளருமான வனதாசன் ஆர்.ஆர்.ராஜசேகரன் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கிராமங்கள், நகரங்களில் குளங்கள், குட்டைகள், ஏரிகள், திறந்த வெளிக் கிணறுகள் அதிகமாகக் காணப்பட்டன. நீர்நிலைகளில் தவளைகள் அதிகமாக உயிர் வாழ்ந்தன. பருவ மழைகளும் அதிக அளவு பெய்தன. அதனால், தவளைகள் இனப்பெருக்கம் அதிகமாகக் காணப்பட்டது.
தவளைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை. தவளையின் முட்டையில் இருந்து வெளியே வரும் குஞ்சுகளுக்கு (தலபிரட்டை) கொசுக்கள்தான் முக்கிய உணவு. தலபிரட்டைகள் கொசுக்களை சாப்பிட்டு உயிர் வாழும்.
அதனால், கடந்த காலத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருந்தது. அதன் மூலம் நோய்களும் மிகக் குறைவாகக் காணப்பட்டன.
தற்போது பள்ளி, கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கும், மாணவர்கள் ஆய்வுக்காக தவளைகளை பிடித்துக் கொன்று வருகின்றனர்.
மேலும், கிராம, நகரப் பகுதிகளில் குளம், குட்டைகள், ஏரிகள், கிணறுகள் பார்ப்பது அபூர்வமாக மாறி விட்டது. மழையளவும் குறைந்து விட்டது. அதனால், வாழ்விடங்கள் சுருங்கி தவளை இனப்பெருக்கம் குறைந்து, அழிந்து வருகிறது.
இதுதவிர சீனாவில் தவளை கறியை அந்நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால், அந்நாட்டிற்கு ஒரு தவளை ரூ.10, ரூ.20க்கு இங்குள்ளவர்கள் பிடித்து அனுப்பினர். இவ்வாறு பல்வேறு காரணங்களால் தவளை இனம் தற்போது 70 சதவீதம் அழிந்துவிட்டது. அதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி மர்ம நோய்கள் வரத்தொடங்கி விட்டன.
அனைத்து உயிரினங்களையும் சம விகிதத்தில் பாதுகாக்கப் பொதுமக்கள், அரசு நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்கால தலைமறையினரை மர்ம நோய் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற முடியும் என்றார்.