Friday, February 21, 2014

மனிதன் என்னும் ஓர் விலங்கினம் 4

எங்க ஊர்ல சாயந்தரம் ஆகிட்டா போதும் விளையாட்டு கலைகட்டும் பசங்கதான் அதிகம் இருப்போம் பொண்ணுங்க கம்மிதான் விளையாட்டுனு பார்த்தா எல்லோரும் ஒன்னாதான் விளையாடுவோம் கபடி கில்லி தண்டு சேனசெட்டியாரு நொன்டி எட்டாள் தொட்டு கள்ளென்போலீசு ஐஸ்1 எரிபந்து கண்கட்டி இன்னும் நிரைய இருக்கு இதெல்லாம் விளையாடுறத பார்த்து 20வருசத்துக்கு மேல ஆயிட்டதால மறந்துட்டேன். ஓவ்வொரு விளையாட்டக்கும் பத்து பேர்னாலும் எல்லா விளையாட்டுக்கும் ஆள் இருக்கும் அது போக பெருசுங்க கதையக் கேட்க ஒரு கூட்டம் இருக்கும் சண்டை வரும் சமாதானம் ஆகும் எங்களோட ஒவ்வொரு அசைவும் இயற்க்கையோட இனஞ்சே இருக்கும். எங்களுக்குள்ள இருந்த உணர்வுப்பூர்வமான நட்பு இப்போ இல்லை எல்லோரும் பார்த்துக்குறோம் பேசிக்கிறோம் ஆனா அதுல உயிர் இல்லை தொலைகாட்சில நல்ல நிகழ்ச்சிகள் வருது நிறைய தெருஞ்சுக்கிட்டோம் ஆனா நாங்க எதையோ இழந்துட்டோம் இப்போ விஷேச நாட்கள்ள கூட யாரும் வெளிய வர்ரதே இல்லை எதும் பேசரதா இருந்தா மொபைல் இருக்கு வேர என்ன வேனும். மனுசனுக்கு இப்போ உண்மையிலேயே என்ன வேணும்னு அடுத்து பார்ப்போம்.....