Friday, February 7, 2014

மனிதன் என்னும் ஓர் விலங்கினம்

மனிதன் தனியா பேசிக்கிட்டா மூளை வளர்ச்சி குறைபாடுன்னு சொல்றோம் உண்மையும் கூட .
ஆனா தனியா பேசிக்காத மனிதனே இல்லை என்பதுதான் உண்மை எல்லோரும் எதோ விதத்துல தான் சொல்ல நினைத்து
சொல்லாமல் விட்டதையோ அல்லது சொல்ல நினைப்பதையோ தனியாக ஒரு முறை சொல்லி பார்த்துக்கொள்கிறோம்
அது ஒரு நம்பிக்கை சொல்ல வேண்டியவர்களிடமே சொல்லிவிட்டதாக ஒரு நம்பிக்கை
டெலிபதினு சொல்லிக்கிற விசயமாகூட இருந்திருக்கலாம் இப்போ அதுமேல நம்பிக்கை இல்லாம போயிருச்சு அதனால
அது உண்மை இல்லை நிருபிக்க முடியலை . தொலைபேசியில தனியா பேசிக்கிறோம் நாம பேசுறது அவங்களுக்கு கேட்கும்னு
நம்புறோம் அதுவும் நடக்குது , அதை விஞ்ஞானதுலவிளக்க முடியும் ஆனால் அந்த விஞ்ஞானம் முற்றும் மனிதனால் உருவாக்க பட்டதா
இயற்கையிலேயே இருக்கும் சில விசயங்களை இயற்க்கைக்கு மாறாகவோ அல்லது இயற்கையோடு இணைந்தோ சில மாற்றங்களை
சேர்க்கைகளை செய்யும் பொது மறைத்திருந்த இயற்க்கை கண்ணுக்கு புலனாகிறது , இப்போ நாம தெரிஞ்சுக்கிட்ட விஷயம்
சாத்தியமே இல்லை என்று எதையும் சொல்ல முடியாது , அதற்க்கு பதிலாக இப்போ அதுமாதிரி இல்லை '
நாளை நடந்தாலும் நடக்கும் அதற்கும் தெளிவான விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கலாம் ,
மனிதன் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதாவது ஒன்றை பிரதான பொருளாக நினைத்து அதை அடைய உயிரையும் பனையமாக
வைத்து போராடி வருகிறான் , முதலில் உணவு பிறகு இடம் இடம் சார்ந்த மக்கள் மக்கள் சார்ந்த பொருட்கள் (தங்கம் இன்ன பிற )
இப்போது பணம் என்கின்ற ஒன்று , இது வரை இயற்கையை ஆட்கொண்டு அதற்காக போராடி அதை வளர்ச்சியின் பாதையில்
கொண்டு சென்ற மனிதன் இயற்கையை மறந்து தான் கண்டு பிடித்த பணம் என்கின்ற பொருளையே பிதானமாக கொண்டு
அதற்காக இயற்கையை பணையம் வைக்கிறான் அழியும் பொருள்மேல் பற்று கொண்டு தானும் தன்னை சுற்றியுள்ள
இயற்கையையும் அழிக்கிறான் (அழித்துவிட்டான்) எது மனிதன் வாழ தேவையானது என்று தெரியாமல் போய்விட்டது
தன்னுடைய சந்ததி மகிழ்ச்சியாய் வாழ எது தேவை என்று தெரியாமல் மனிதன் மதி மயங்கி கிடக்கிறான்
தான் செய்யும் தவறுகளால் தனது சந்ததியே அழியும் என்று அறியாமல் செய்கிறான்
நான் என்னால் கண்டு என்னுள் அனுபவித்த என் மூளை  வளர்ச்சிக்கு தகுந்த சிந்தித்த சில விசங்களை உங்களோடு
பகிர்ந்து கொள்ள நினைக்கிறன் காண்பீர்கள் என்ற நம்பிக்கைதான் , நீங்கள் காணாது போனால் நானும் ஒரு பைத்தியமே ...
                                                                                                                     தொடரும்    

Wednesday, February 5, 2014

கொல்வதுதான் இறுதித் தீர்வா?

ஊட்டியில் தொட்டபெட்டாவை அடுத்துள்ள கிராமங்களில் தனது இருப்பிடம் மாறி, ஊனமுற்றதன் காரணமாக (ஊனத்துக்கான சரியான காரணம் இப்போது வரை அறிவிக்கப்படவில்லை) ஆட்கொல்லி வேங்கை புலி சுட்டு கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாய் `தி இந்து’ நாளிதழில் இரு காட்டுயிர் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
ஒருவர் ஆட்கொல்லிப் புலிகள் பரம்பரையாகவே ஆட்கொல்லியாக மாறும், அதனால் அவற்றைக் கொல்வதில் தவறில்லை என்று கூறியிருந்தார். மற்றவர், ஜிம் கார் பெட்டை மேற்கோள் காட்டி, புலி காட்டில் வாழும் தகுதியை இழந்து விட்டதால் சுட்டதில் தவறில்லை என்று எழுதியிருந்தார்.
இவற்றை எல்லாம் வைத்து யோசிக் கும்பொழுது, பழைய காட்டுயிர் ஆர்வலர்-ஆராய்ச்சியாளர்களின் பல அறிவுபூர்வமான கூற்றுகளை நமது கருத்துக்கேற்ப மாற்றிப் பயன்படுத்துவது புலப்படுகிறது.
ஜிம் கார்பெட் தனது வாழ்நாளில் ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாடிய அனுபவங்களைப் படித்த எவரும், ஊட்டியில் புலி சுட்டுக் கொல்லப்பட்ட விதத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நூற்றுக்கணக்கான மக்கள், ஐம்பது அறுபது வனக்காவல் மற்றும் அதிரடிப் படை வீரர்களுடன் புலியைக் கிளப்பிவிட்டு, 36 குண்டுகள் துளைக்கக் கொன்றிருக்கிறார்கள் (தாரை தப்பட்டை பேண்டு முழங்காததுதான் குறை!).
கார்பெட்டைப் போலத் தனியனாய், தடமறிந்து, நடந்து சென்று கொல்லவில்லை. கார்பெட்டைப் போல இது தான் ஆட்கொல்லிப் புலியா என்று கணித்தும் பார்க்கவில்லை. காரணம், காட்டில் தடமறிதல் என்ற கலை அற்றுப்போனதுதான். தடமறிதலில் இன்னும் சில காட்டுவாசிகளே சிறந்து விளங்குகின்றனர். அவர்களது திறனும் அடுத்த தலைமுறைக்குப் போகாமல் வீணாகிறது.
ஏனெனில், அவர்களும் ஒரு கூலியைப் போல நடத்தப்படுவதுதான். ஆனால் பல காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள் இன்றும் அவர்களது உதவியையே நாடிவருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை! இன்னும் அடித்தட்டு ஊழியர்தான்!
ஊட்டியிலும் பொம்மன் என்ற பழங் குடியின நண்பரின் உதவியோடுதான் இந்தப் புலியைச் சுட்டிருக்கின்றனர். ஆனால், அவரது பங்களிப்பு பற்றி எந்தப் பத்திரிகையும் எழுதவில்லை, காட்டிலாகாவும் கூறவில்லை.
மற்றொரு விஷயம் - ஆட்கொல்லியைக் கொல்வதுதான் நல்லது என்ற கருத்தின் அடிநாதம் - மனிதன்தான் உயர்ந்தவன், அவனே இங்கு வாழப் பிறந்தவன், மற்றவை எல்லாம் அவனுக்குப் பின்னர்தான் என்ற சித்தாந்தம்! அது சரியென்றால், நாம் பல யானைகளைக் கொல்ல வேண்டி வரும். ஏனெனில் அவை பல உயிர்களைச் சிதைக்கின்றன. சிறுத்தைகளைக் காவு வாங்க வேண்டும். ஏனெனில், அவை ஊரில் நுழைந்து உபத்திரவம் தருகின்றன!
காட்டுயிர் மருத்துவர் டாக்டர் கே எனப்படும் கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்றை அறிந்தவர்கள் அல்லது அவருடன் இருந்தவர்கள் அவர் எவ்வாறு மயக்க மருந்து குண்டை (Tranquiliser dart) பயன்படுத்தினார் என்பதை அறிவர். அவரைப் போல ஒருவர் இருந்திருந்தால், இதைப் போன்ற சம்பவம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. இவை எல்லா வற்றுக்கும் காட்டுயிர்கள், இயற்கை யின் பால் அவரைப் போன்ற ஈடுபாடு இல்லாததும் அவரைப் போன்றவர் களை ஊக்குவிக்காததும்தான் காரணம்.
எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனில், இதன் மூலக் காரணமான காடுகள், இரை விலங்குகள் சுருங்குவதைத் தடுக்க வேண்டும். மேலும் காடுகளுக்கு அடுத்துள்ள இடைப்படு பகுதிகளில் (Buffer) மனிதன் வாழிடமாக இல்லாமல் இருக்க வேண்டும். இதைப் போன்ற ஆட்கொல்லிகளைக் குறைந்தபட்சம் கருணைக் கொலையாவது (Mercy killing) செய்ய வேண்டும்-வேறு வித மான மறுவாழ்வு முறைகள் சாத்திய மில்லாதபோது. சுட்டுப் பிடிப்பது என்பது ஒரு நல்ல தீர்வு ஆகாது.
ஏனென்றால், 1995ல் சிக்மகளூரில் மனிதர்களை சிறுத்தை தாக்க ஆரம்பித்தபோது 17 சிறுத்தைகள் கொல்லப்பட்டன. ஆனால்
பிரச்சினைக்குக் காரணம் ஒரேயொரு சிறுத்தைதான்.
என்றுமே மனித இனம் மாறுபட்ட கருத்துகளையும் கொள்கைகளையுமே கண்டு வந்துள்ளது. உதாரணமாக, "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரும், "மனிதனே மிருகம் போலத்தான், அதனால் புலால் உண்பதுதான் சரி யான வழி" என்ற பெரியாரும் இந்த நாட்டில்தான் வாழ்ந்தனர். யார் சரி, யார் தவறு என்ற பேச்சு வாக்கு வாதத்தை வேண்டுமானால் வளர்க்கும். தீர்வு கிடைக்காது.
- கட்டுரை ஆசிரியர் காட்டுயிர் ஆர்வலர்
தொடர்புக்கு: hkinneri@gmail.com

Monday, February 3, 2014

அக்கா 'குருவி'

அப்போ எங்களுடைய ஜாகை ரயில்வே வீட்டில் ஸ்டேஷனுக்கு மேலே உள்ள மாடியில். அந்தக்கால மோஸ்த்தரில் ஜன்னல் அதற்கேற்ற கண்ணாடிக்கதவுக ளும்,எத்தனை டிகிரி சூடேற்றினாலும் இளகாத இரும்புக் கொண்டிகளையும் கொண் டது. இழுத்து ஜன்னல் கதவைச் சார்த்துவது என்பது, அத்தனை சுளுவில் நடந்துவிடாது. அந்தக் கண்ணாடிக்கதவுகளூடே ரயில் செல்வதைப் பார்க்கப் பிடிக்கும். சத்தம் ஏதும் கேட் காமல் அதிர்வோடு கூடிய ரயில் ஊர்ந்துசெல்வது தெளிவாகத் தெரியும்.
வீட்டிற்கு விட்டம் என்பது மூன்று ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருக்கும், அந்த உயரத்திலிருந்து இரு பக்க சுவர்களை இணைக்க தண்டவாளங்களை வைத்து ‘கர்டர்’ போட்டிருப்பார்கள். அந்தக் ’கர்டர்’களிலிருந்து பெரிய ஃபேன் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். சுவிட்சைப் போட்டால் சுனாமியே வந்தது போல சுழன்றியடிக்கும் காற்று. ரெகுலேட்டர் வகையறாவெல்லாம் பழுப்பேறிப்போய் அதன் குமிழை திருக்குவதற்குள் காற்று நம்மை அடித்துக் கொண்டுபோய்விடும். அதனால் எப்போதாவது வெய்யில் அதிகம் இருக்கும் நாட்களில் , வீடு முழுக்க வெய்யிலின் தாக்கம் இருக்கும் போது மட்டும் அதைச் சுழலவிடுவது வழக்கம்.
அன்று காற்று துளிக்கூட அடிக்கவில்லை, வெய்யில் தாங்கவியலாமல் அடித்துக் கொண்டிருந்தது. வெக்கை பரவி வீட்டுக்குள் இருக்கமுடியாமல் போனது. ‘அந்த ஃபேன் சுவிட்சைப் போட்டு விட்றா’ என்றாள் அக்கா. வேக மாக ஏறிப்போட்டுவிட்டேன்.
அப்போது பார்த்து எங்கி ருந்தோ ஒரு சிட்டுக்குருவி வீட்டிற் குள் பறந்து வந்தது. ‘கீச் கீச்’ என்று கத்தியபடியே இங்குமங்கும் பறந்துகொண்டிருந்த குருவி சுழன்று கொண்டிருந்த ஃபேனின் இறக்கையில் அடிபட்டு பொத்தென விழுந்தது, ‘யக்கா யக்கா’ குருவி செத்துப்போச்சு’ என்று கத்தினேன். ஓடிவந்தவள், ‘ச்சீ சாகவெல்லாம் இல்லை, அதுக்குத்தான் இந்த ஃபேனைப் போடவே கூடாது, என்றாள். வெள்ளைப்பூண்டு போட்டு வைக்கும் கூடையிலிருந்த பூண்டுகளை கொட்டிவிட்டு குருவியை அதற்குள் வைத்து மேலே இருந்த கம்பிகளை கீழிறக்கி மூடினாள்.
பின்னர், மஞ்சளை அரைத்துக்கொண்டுவந்து, கம்பிக் கூடையின் ஓட்டைகள் வழியாக அந்தக் குருவியின் இறக்கையை சற்றே தூக்கிவிட்டு மஞ்சளைத் தடவிவிட்டாள். சிறிது நேரத்தில் மயங்கிப்போய், கூண்டின் அடுத்த பக்கத்தில் சாய்ந்து கிடந்தது. கொஞ்ச நேரம் கழித்து கைப்பிடி அளவு சோறை ஒரு கொட்டாங்குச்சியில் வைத்து மேல் மூடியை குருவி அறியாது திறந்து உள்ளே வைத்து விட்டாள். அசையாது படுத்துக்கிடந்த அந்தக்குருவி அரவம் கேட்டதும் கால்களை உதைத்து முன்வந்து பார்த்தது. பின்னர் மெதுவாக ஒன்றிரண்டு பருக்கைகளை கொத்தித்தின்ன முயன்றது.
இரண்டு நாள் கழிந்தது. தரையில் வைத்திருந்த கூடையை மெதுவாக எடுத்து மரப்பலகையில் இருந்த ஆணி யில் தொங்கவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஆறியது காயம். கூண்டுக்குள்ளேயே கீச் கீச் என்று சில சமயங்களில் கத்தும். அதன் உடலிலும் இறக்கை யிலும் அந்த மஞ்சள் கறை இன்னும் போகவில்லை. சில சமயங்களில் மூக்கை வைத்து நீவுகிறேன் பேர்வழி என்று காயத்தில் பட்டுவிட்டால் சிறிது நேரம் கத்தும். பின்னர் அமைதியாகிவிடும்.
‘யக்கா இந்தக்குருவிய நாமளே வளப்பமா’ என்று கேட்டால் ‘ போடா அதெல்லாம் எப்பவும் பறந்துக்கிட்டே இருக்கிறது, இப்டி கூண்டுலல் லாம் அடைச்சி வெக்கக்கூடாது, எதோ அடிபட்டுருச்சேன்னு தான் வெச்சிருக்கேன். அப்புறம்? ‘சரியானவொடனே கதவைத் திறந்து விட்டுருவேன்’ என்பாள் அக்கா.
நான் அருகில் சென்றாலே படபடவென சிறகுகளை அடித்துக் கொண்டு தன்னைப்பிடிக்கத்தான் வருகிறான் என நினைத்து கூண்டின் அடுத்த பகுதியில் போய் ஒண்டிக்கொள்ளும். பள்ளிக்
கூடம் போவதற்கு முன்பும், வீடு வந்து சேர்ந்தபின்பும் அதைப் போய்ப்பார்க்காமல் எனக்கு உறக்கமே வருவதில்லை. ஒரு நாள் வீடு திரும்பி வந்த போது கூண்டுக்குள் அந்தக்குருவியைக் காணவில்லை. பயந்துபோய் அக்காவிடம் சென்றேன் இதைத் தான் கேட்க வந்திருக்கிறான் என ஊகித்தபடி ‘என்ன குருவி தானே, மூடியைத்திறந்து பறக்கவிட்டுட்டேன்,காயம் தான் ஆறிருச் சில்ல’ என்றாள். எனக்கு ஒன்றுமே சொல்லத்தோணவில்லை.
அவ்வப்போது பக்கத்திலி ருக்கும் மரங்களில் அந்தக்குருவி தென்படுகிறதா என்று பார்த்துப்பார்த்து ஏமாந்து போவேன், அப்போதெல்லாம் தூரத்தி லிருந்து என்னைப்பார்த்து சிரித்துக்கொள்வாள் என் அக்கா.
http://chinnappayal.blogspot.com/2014/01/blog-post_26.html
Keywords:

Sunday, February 2, 2014

இந்தியன் எனும் ஏமாளி

இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிறிய ரக கார்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது சமீபத்திய ‘குளோபல் என்.சி.ஏ.பி.’ ஆய்வு. இந்த நிறுவனம் கார்களை வேகமாக ஓட்டிவந்து மோதிப் பார்க்கும் சோதனைக்கு உள்படுத்தியபோது, ‘சுசூகி-மாருதி ஆல்டோ 800’, ‘டாட்டா நானோ’, ‘ஃபோர்டு ஃபிஃகோ’, ‘ஹூண்டாய் ஐ-டென்’, ‘ஃபோக்ஸ்வேகன் போலோ’ ஆகிய ஐந்து சிறிய ரக கார்களும் ஒரு விபத்து நேரிட்டால், அப்பளம்போல நொறுங்கிப்போகும் வாய்ப்புடையவை என்பதும் அவற்றில் பயணிப்போருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையில் முன்னணியில் இருப்பவை இந்த கார்கள்; நம் நாட்டில் விற்பனையாகும் ஐந்து கார்களில் ஒன்று இவற்றில் ஏதேனும் ஒரு கார் என்கிற பின்னணியில் இந்தச் சோதனையின்போது வெளிவந்திருக்கும் உண்மைகள் அதிரவைக்கின்றன.
இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக ஆய்வை நடத்திய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விஷயம், இந்திய நுகர்வோரை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் எப்படி மதிப்பிடுகின்றன என்பதை உணர்த்தப் போதுமானது. அதாவது, “இந்த கார்களில் காற்றுப் பைகள் கிடையாது. நிறுத்த முடியாத அளவுக்கு கார் வேகமாகச் செல்லும்போது, இந்த காற்றுப் பைகளைப் பயன்படுத்தினால் காரின் வேகம் கணிசமாக மட்டுப்படும். ஆனால், அவை பொருத்தப்படவில்லை. அதேசமயம், இதே கார்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கப்படும்போது அவை காற்றுப்பைகளுடனே விற்கப்படுகின்றன” என்று சுட்டிக்காட்டுகிறது அந்த ஆய்வறிக்கை.
இந்த ஆய்வறிக்கை வெளியான உடனேயே இந்த கார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், “கார் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் தடுப்பதுதான் எம் முதல் நோக்கம்; அதற்கேற்ற தீவிர நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். ‘ஃபோக்ஸ்வேகன்’ நிறுவனம் தன்னுடையோ ‘போலோ’ ரக கார்களைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றிருக்கிறது. கூடவே, “இனி விற்கப்படும் கார்களில் காற்றுப் பைகளும் பிரேக்குகள் பழுதாகாமல் இருப்பதற்கான சாதனமும் சேர்த்தே விற்கப்படும்; அவற்றுக்காகக் கூடுதலாக 2.7% கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். 2012-ல் மட்டும் 1,40,000 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். இவற்றில் கார் பயணிகளின் இறப்பு சுமார் 17%. இந்தியாவில் விற்கும் கார்களில் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட கார்களின் சந்தை 80%. மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தச் சந்தை மேலும் பிரம்மாண்டமாக விரிவடையும். எனில், எவ்வளவு பெரிய ஆபத்து இது?
பெருநிறுவனங்களுக்கு எப்போதுமே லாபமே முக்கியக் குறிக் கோள் என்பதும் இந்தியச் சந்தைக்கு அவை கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான் என்பதும் ஆச்சரியமானதல்ல. ஆனால், இப்படிப்பட்ட ஆபத்துகளை எல்லாம் அரசாங்கம் எப்படி வேடிக்கை பார்க்கிறது?