சென்னை-திருச்சிராப்பள்ளி-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி தொடருந்துப் பாதையில், திண்டுக்கல் மற்றும் மதுரைக்குஇடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடைக்கானலுக்கு மகிழுந்து அல்லது பேருந்து மூலம் செல்ல வேண்டும். திண்டுக்கல், மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம் பழனிஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகிழுந்தில் செல்வோர் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும், பழனி மலை வழியாகவும், பாச்சலூர், தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் வழியாக செல்லலாம். இவற்றுள் வத்தலக்குண்டு வழியே செல்லும் பாதையே சிறந்ததாக உள்ளது.தேனியிலிருந்து மகிழுந்தில் கொடைக்கானல் செல்பவர்கள் பெரியகுளம், தேவதானப்பட்டி தாண்டியவுடன் காட்ரோடு என்ற இடத்தில் கொடைக்கானல் செல்லும் சாலை பிரிவதால் அங்கிருந்தே செல்லலாம்
- மதுரை 135 கிலோமீட்டர்
- கோயம்புத்தூர் 170 கிலோமீட்டர்
- திருச்சி 195 கிலோமீட்டர்
- சென்னை 465 கிலோமீட்டர்
சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
- பிரையண்ட் பார்க்
- தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
- தூண் பாறைகள்
- கவர்னர் தூண்
- கோக்கர்ஸ் வாக்
- அப்பர் லெக்
- குணா குகைகள்
- தொப்பித் தூக்கிப் பாறைகள்
- மதி கெட்டான் சோலை
- செண்பகனூர் அருங்காட்சியம்
- 500 வருட மரம்
- டால்பின் னொஸ் பாறை
- பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
- பியர் சோலா நீர்வீழ்ச்சி
- அமைதி பள்ளத்தாக்கு
- குறிஞ்சி ஆண்டவர் கோயில்
- செட்டியார் பூங்கா
- படகுத் துறை
- வெள்ளி நீர்வீழ்ச்சி
- கால்ஃப் மைதானம்
- கொடைக்கானலில் தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
- கொடைக்கானலில் கிராமம் அதிகமாக இருகின்ரன.
No comments:
Post a Comment