Saturday, November 9, 2013

சிந்திக்க மட்டும் ஒரு "சிறு" கதை

அவர் ஒரு குயவர். அழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார் . அந்தவழியே சென்ற மற்றொருவர் 'இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருகிறாய் " என்று குயவரிடம் கேட்டார் .
'நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரபோகிறேன்" என்றார்
அப்படியா" எனக்கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளைஎல்லாம் ஒவ்வொன்றாய் போட்டு உடைக்க ஆரம்பித்தார் .
பதறிப்  போய் ஓடிவந்த குயவர் இறைந்து கத்தினார் .
அதற்க்கு "உனக்கு சந்தோசமாக இருக்குமே என்றுதான் உடைத்தேன்" என்றார் வந்தவர்
"நான் செய்த பானைகளை என் முன்னே உடைத்தால் எனக்கு எப்படி சந்தோசம் வரும்" என்றார் குயவர் கோவமாக
"நீ மட்டும் இறைவனின் படைப்பை அவர்முன்னே கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்கிறாய் " என்றார் வந்தவர்
 

No comments:

Post a Comment