அப்படி மனித மனம் மாற காரணம் என்ன என்று யாரையும் எதையும் குறைகூற விரும்பவில்லை, அதை மாற்ற என்ன செய்யலாம், என்று கருத்து
கூறவும் வரவில்லை நான் பிறந்த இந்த உலகம் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்ப வந்திருக்கிறேன், எங்க கிராமம் விடியும் முன்னமே சுறுசுறுப்பாகி விடும் அதிகாலை நாலு மணிக்கெல்லாம் கோழி கூவும் பால் கரக்கரவங்க மணிசத்தம் அந்த நேரத்துல ரொம்ப இனிமையா இருக்கும் தோட்டத்துக்கு பூ பறிக்க போறவங்க தண்ணி இறைக்க போறவங்க நெல்லு குத்த உரலுக்கு இடம் பிடிக்க போறவங்க பொதுகினத்துல தண்ணி இறைக்க கிளம்புறவங்கன்னு ஊரே சுறுசுறுப்பாயிருக்கும் நாங்க மட்டும் சுருண்டு படுக்கத்தான் பார்ப்போம் அம்மா சேலைதான் போர்வை அந்த காலை நேரத்துல இயற்க்கை உந்துதலை சமாளிச்சுகிட்டு படுத்திருக்கிறதே ஒரு சுகம்தான் ''டேய் எந்திரிடா கத்திரிக்கா பொறுக்க போகணும்னு'' அப்பா சத்தம் போடுறப்போ நெஞ்சுக்குளில கோவம் கிளம்பும் ஆனா 'பயம்' கிடைக்கிற துணிய எடுத்து தலையில போட்டுக்கிட்டு தோட்டத்துக்கு போகவச்சுடும் , ஒரு வழியா எல்லா வேலையும் முடுச்சுட்டு பள்ளிகூடத்துக்கு கிளம்பினா பை எங்கே வச்சோம்னு தெரியாது.., அம்மாகிட்ட பத்து பைசா இல்லேன்னா காலணா வாங்கிட்டு பசங்களோட சேர்ந்துகிட்டு நடக்கும் பொது பேசுவோமே ஒரு பேச்சு சென்சார்ல கேட்டா செத்துருவாங்க பள்ளிகூடத்துல நடந்தெல்லாம் விளக்கமா சொல்லனும்னா நீங்க படிச்சத விட நான் கொஞ்சம் கம்மியா படிச்சுருப்பேன் நீங்க நடிசத விட நான் கொஞ்சம் அதிகமா நடிச்சுருப்பேன் நீங்க விளையான்டாத விட கொஞ்சம் அதிகமா விளையான்டிருப்பேன் நீங்க திருடி தின்ன மாங்காய விட ஒன்னு அதிகமாவே திருடி இருப்பேன் ஓ மன்னிச்சுடுங்க நீங்க திருடி தின்னது இல்லையா ....?
பொழுது சாய எப்போடா மனியடிப்பனுங்கன்னு இருக்கும்..? முதல் ஆளா வீட்டுக்கு ஒடிவர்ரதுல அவ்ளோ சந்தோசம்... அப்படி வந்தாலும் நமக்கு முன்னாடியே ரெண்டு பேரு வந்துருப்பானுங்க கடைசி பீர்டு பீடி பீர்டாம்.... வேலிய தாண்டி வந்தத சொல்லி வயிதெருசல கிளப்புவாய்ங்க..................தொடரும்.....
இதுல எங்க கலாச்சார சீரழிவு இருக்குனு நினைக்கிறீங்களா சமுதாயம்னா நானும் சேர்ந்ததுதானங்க..? என்னை பற்றி சொன்னாவே போதும்னு நினைக்கிறேன் வரப்போற நிகழ்ச்சிகள்ல அத நீங்களே தெருஞ்சுக்குவீங்க..! ......
No comments:
Post a Comment