Monday, February 10, 2014

மனிதன் என்னும் ஓர் விலங்கினம்-2


எங்க கிராமம் ஒரு மலையடிவாரம் மலை பெருசா இருந்தாலும் பேறு சிறுமலைதான் நல்ல குளிர்ச்சியான மலை குட்டி கொடைகானல்னு செல்லமா சொல்வோம் வானுயர்ந்த மரங்கள் நிறைஞ்சிருக்கும் அங்கிருக்கும் ஒருசில ஓடைகளில் வருடம் முழுவதும் தண்ணீர் வந்துகிட்டே இருக்கும் அதிகமா காபிகொட்டை மிளகும் விளையும், கெலையாடு மானு காட்டுகோழிங்க காட்டெருமைங்க காட்டுபன்னிங்கனு சுத்தி பார்க்க போறவங்களுக்கு நிமிசத்துக்கு நிமிஷம் திகிலான சந்தோசம் தரக்கூடிய மலைங்க, அங்க கிடைக்கிற எல்லாமே மருத்துவ குணம் நிரஞ்ச பழங்கள்தான் சிறுமலை பலா வாழைன்னா தமிழ்நாடு முழுசும் பிரபலம் , அந்த மலை தெருஞ்சும் தெரியாமலும் பல லட்சம் மனிதர்களை வாழ வைக்கிறது , நாங்க பசங்க நாலு பேரு சேர்தொம்னா மலைக்கு போறதுதான் அடுத்த வேலையா இருக்கும் பலாபழம் பருச்சு திங்கவும் காட்டுவிலங்குகளை மறஞ்சு நின்னு பார்குரதும் காட்டெருமை எங்க பக்குதுல உரசிக்கிட்டு போச்சுன்னு வந்து பெருமையடிக்கிறதும் ரொம்ப சகஜம் , காட்டுக்குள்ள வழி தவறிட்டா பாதைய கண்டுபிடிச்சு வர்றதுக்குள்ள ஒருநாளே முடுஞ்சுடும் மறுபடியும் எப்படா மலைக்கு போவோம்னு கூட்டு சேர்ந்து பேசுறதே தில்லா சந்தோசமா இருக்கும் , அடிவாரத்துல எங்க ஊர் இருகிறதால எப்பவும் குளிர்ச்சியா இருக்கும் ஒரு இளநீர் பறிச்சா ரெண்டு மூனுபேரு குடிக்கணும் ஒருத்தர் மட்டும் குடிச்சு தீர்க்க முடியாது , கினதுலதான் குளிப்போம் குளிக்கும்போது ஒவ்வொருமுறையும் ஒரு விளையாட்டா இருக்கும் , ஆழ்துளை கிணறு ஒருசில தொட்டங்கல்ல இருக்கும் 50அடி 100அடில தண்ணி இருக்கும் காரணம் அந்த சிறுமலைதாங்க , கள்ளசாராயம் தெரியுமா அதோட தலை நகரமே சிறுமலைதான் கவெருமெண்டு அனுமதிச்சா நல்ல சாராயம் அனுமதியில்லாம வித்தா அது கள்ளசாராயம் , அது காய்சவே மலையில தனி இடம் இருக்கும் , சாராயம் காய்ச்சி வாழ்ந்த குடும்பம் பத்து கெட்ட குடும்பம் பத்துனு ஏதோ நடக்கும் , அவனுங்கள அவனுங்க அனுமதி இல்லாம பிடிக்கவே முடியாது , கொஞ்சம் காட்டுக்குள்ள ஓடி மரஞ்சாலும் கண்டு பிடிக்கவே முடியாது மலை சம்மந்த என்னோட அனுபவம் மட்டும் எழுதனும்னா 200 பக்கம் தாண்டும் , ஆகா இப்படி ஒருமலையா அதுவும் திண்டுக்கல் பக்கத்திலையானு பார்க்க கிளம்பிடாதீங்க , நான் சொன்னது எல்லாமே ஆறேழு வருசத்துக்கும் முன்னால, ஏன் இப்போ மலை இல்லையானு கேக்கிறீங்களா.. மலை இருக்குங்க நான் சொன்ன அடையாளம் எதுவுமே இல்லைங்க , யாரோ தனியாராம் அவுங்க ஆக்கிரமுசுட்டான்கலாம்... மரங்களை எல்லாம் யாரோ உளுத்து போன மரம் வெற்றேன்னு.. கவெருமெண்ட ஏமாத்தி 4000ஆயிரம் ஏக்கருக்கு மேல இருந்த மரத்தையெல்லாம் திருடிட்டு போயிட்டாராம் ... சுத்தி பார்க்க நின்னு சுத்தவே இடம் இல்லைங்க காட்டுவிலங்கு பாக்க காட்டெலி கூட இல்லைங்க .. எங்க ஊர்லயும் ஒருத்தர் இளநீர் சாபிடனும்னா ஐந்து இளநீ வெட்டனும் அவ்ளோ சிறுத்து போயிருச்சு அந்த மலை மாதிரியே ... எல்லோருடைய தொட்டதுளையும் ஆழ்துளைகிணறு இருக்கு ஆனா தண்ணிதான் இல்லை 1000 அடி 2000 அடி போய்கிட்டே இருக்கு...
............................................................................................................................................ தொடரும்

No comments:

Post a Comment