Friday, February 7, 2014

மனிதன் என்னும் ஓர் விலங்கினம்

மனிதன் தனியா பேசிக்கிட்டா மூளை வளர்ச்சி குறைபாடுன்னு சொல்றோம் உண்மையும் கூட .
ஆனா தனியா பேசிக்காத மனிதனே இல்லை என்பதுதான் உண்மை எல்லோரும் எதோ விதத்துல தான் சொல்ல நினைத்து
சொல்லாமல் விட்டதையோ அல்லது சொல்ல நினைப்பதையோ தனியாக ஒரு முறை சொல்லி பார்த்துக்கொள்கிறோம்
அது ஒரு நம்பிக்கை சொல்ல வேண்டியவர்களிடமே சொல்லிவிட்டதாக ஒரு நம்பிக்கை
டெலிபதினு சொல்லிக்கிற விசயமாகூட இருந்திருக்கலாம் இப்போ அதுமேல நம்பிக்கை இல்லாம போயிருச்சு அதனால
அது உண்மை இல்லை நிருபிக்க முடியலை . தொலைபேசியில தனியா பேசிக்கிறோம் நாம பேசுறது அவங்களுக்கு கேட்கும்னு
நம்புறோம் அதுவும் நடக்குது , அதை விஞ்ஞானதுலவிளக்க முடியும் ஆனால் அந்த விஞ்ஞானம் முற்றும் மனிதனால் உருவாக்க பட்டதா
இயற்கையிலேயே இருக்கும் சில விசயங்களை இயற்க்கைக்கு மாறாகவோ அல்லது இயற்கையோடு இணைந்தோ சில மாற்றங்களை
சேர்க்கைகளை செய்யும் பொது மறைத்திருந்த இயற்க்கை கண்ணுக்கு புலனாகிறது , இப்போ நாம தெரிஞ்சுக்கிட்ட விஷயம்
சாத்தியமே இல்லை என்று எதையும் சொல்ல முடியாது , அதற்க்கு பதிலாக இப்போ அதுமாதிரி இல்லை '
நாளை நடந்தாலும் நடக்கும் அதற்கும் தெளிவான விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கலாம் ,
மனிதன் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதாவது ஒன்றை பிரதான பொருளாக நினைத்து அதை அடைய உயிரையும் பனையமாக
வைத்து போராடி வருகிறான் , முதலில் உணவு பிறகு இடம் இடம் சார்ந்த மக்கள் மக்கள் சார்ந்த பொருட்கள் (தங்கம் இன்ன பிற )
இப்போது பணம் என்கின்ற ஒன்று , இது வரை இயற்கையை ஆட்கொண்டு அதற்காக போராடி அதை வளர்ச்சியின் பாதையில்
கொண்டு சென்ற மனிதன் இயற்கையை மறந்து தான் கண்டு பிடித்த பணம் என்கின்ற பொருளையே பிதானமாக கொண்டு
அதற்காக இயற்கையை பணையம் வைக்கிறான் அழியும் பொருள்மேல் பற்று கொண்டு தானும் தன்னை சுற்றியுள்ள
இயற்கையையும் அழிக்கிறான் (அழித்துவிட்டான்) எது மனிதன் வாழ தேவையானது என்று தெரியாமல் போய்விட்டது
தன்னுடைய சந்ததி மகிழ்ச்சியாய் வாழ எது தேவை என்று தெரியாமல் மனிதன் மதி மயங்கி கிடக்கிறான்
தான் செய்யும் தவறுகளால் தனது சந்ததியே அழியும் என்று அறியாமல் செய்கிறான்
நான் என்னால் கண்டு என்னுள் அனுபவித்த என் மூளை  வளர்ச்சிக்கு தகுந்த சிந்தித்த சில விசங்களை உங்களோடு
பகிர்ந்து கொள்ள நினைக்கிறன் காண்பீர்கள் என்ற நம்பிக்கைதான் , நீங்கள் காணாது போனால் நானும் ஒரு பைத்தியமே ...
                                                                                                                     தொடரும்    

No comments:

Post a Comment