Friday, July 11, 2014
குளிக்கக் குற்றாலம் இருக்குமா?
Thursday, June 5, 2014
கடல் மட்டம் உயர்ந்தால் தமிழகம் என்ன ஆகும்?
Thursday, May 1, 2014
நவீன சிந்துபாத்
மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் காக்க யோசனைகள்
Monday, April 28, 2014
சூழலியல் மாசு: வேதி நச்சுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியுமா?
Friday, April 25, 2014
உலகப் புவி நாள்
உணவுச் சங்கிலி
Monday, April 21, 2014
காட்டுப்புறாவும் கொண்டைக்குருவியும்
பவளக் கூர்வாய் செங்கால் நாரை’
Friday, February 21, 2014
மனிதன் என்னும் ஓர் விலங்கினம் 4
எங்க ஊர்ல சாயந்தரம் ஆகிட்டா போதும் விளையாட்டு கலைகட்டும் பசங்கதான் அதிகம் இருப்போம் பொண்ணுங்க கம்மிதான் விளையாட்டுனு பார்த்தா எல்லோரும் ஒன்னாதான் விளையாடுவோம் கபடி கில்லி தண்டு சேனசெட்டியாரு நொன்டி எட்டாள் தொட்டு கள்ளென்போலீசு ஐஸ்1 எரிபந்து கண்கட்டி இன்னும் நிரைய இருக்கு இதெல்லாம் விளையாடுறத பார்த்து 20வருசத்துக்கு மேல ஆயிட்டதால மறந்துட்டேன். ஓவ்வொரு விளையாட்டக்கும் பத்து பேர்னாலும் எல்லா விளையாட்டுக்கும் ஆள் இருக்கும் அது போக பெருசுங்க கதையக் கேட்க ஒரு கூட்டம் இருக்கும் சண்டை வரும் சமாதானம் ஆகும் எங்களோட ஒவ்வொரு அசைவும் இயற்க்கையோட இனஞ்சே இருக்கும். எங்களுக்குள்ள இருந்த உணர்வுப்பூர்வமான நட்பு இப்போ இல்லை எல்லோரும் பார்த்துக்குறோம் பேசிக்கிறோம் ஆனா அதுல உயிர் இல்லை தொலைகாட்சில நல்ல நிகழ்ச்சிகள் வருது நிறைய தெருஞ்சுக்கிட்டோம் ஆனா நாங்க எதையோ இழந்துட்டோம் இப்போ விஷேச நாட்கள்ள கூட யாரும் வெளிய வர்ரதே இல்லை எதும் பேசரதா இருந்தா மொபைல் இருக்கு வேர என்ன வேனும். மனுசனுக்கு இப்போ உண்மையிலேயே என்ன வேணும்னு அடுத்து பார்ப்போம்.....
Wednesday, February 12, 2014
மனிதன் என்னும் ஓர் விலங்கினம்-3
அப்படி மனித மனம் மாற காரணம் என்ன என்று யாரையும் எதையும் குறைகூற விரும்பவில்லை, அதை மாற்ற என்ன செய்யலாம், என்று கருத்து
கூறவும் வரவில்லை நான் பிறந்த இந்த உலகம் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்ப வந்திருக்கிறேன், எங்க கிராமம் விடியும் முன்னமே சுறுசுறுப்பாகி விடும் அதிகாலை நாலு மணிக்கெல்லாம் கோழி கூவும் பால் கரக்கரவங்க மணிசத்தம் அந்த நேரத்துல ரொம்ப இனிமையா இருக்கும் தோட்டத்துக்கு பூ பறிக்க போறவங்க தண்ணி இறைக்க போறவங்க நெல்லு குத்த உரலுக்கு இடம் பிடிக்க போறவங்க பொதுகினத்துல தண்ணி இறைக்க கிளம்புறவங்கன்னு ஊரே சுறுசுறுப்பாயிருக்கும் நாங்க மட்டும் சுருண்டு படுக்கத்தான் பார்ப்போம் அம்மா சேலைதான் போர்வை அந்த காலை நேரத்துல இயற்க்கை உந்துதலை சமாளிச்சுகிட்டு படுத்திருக்கிறதே ஒரு சுகம்தான் ''டேய் எந்திரிடா கத்திரிக்கா பொறுக்க போகணும்னு'' அப்பா சத்தம் போடுறப்போ நெஞ்சுக்குளில கோவம் கிளம்பும் ஆனா 'பயம்' கிடைக்கிற துணிய எடுத்து தலையில போட்டுக்கிட்டு தோட்டத்துக்கு போகவச்சுடும் , ஒரு வழியா எல்லா வேலையும் முடுச்சுட்டு பள்ளிகூடத்துக்கு கிளம்பினா பை எங்கே வச்சோம்னு தெரியாது.., அம்மாகிட்ட பத்து பைசா இல்லேன்னா காலணா வாங்கிட்டு பசங்களோட சேர்ந்துகிட்டு நடக்கும் பொது பேசுவோமே ஒரு பேச்சு சென்சார்ல கேட்டா செத்துருவாங்க பள்ளிகூடத்துல நடந்தெல்லாம் விளக்கமா சொல்லனும்னா நீங்க படிச்சத விட நான் கொஞ்சம் கம்மியா படிச்சுருப்பேன் நீங்க நடிசத விட நான் கொஞ்சம் அதிகமா நடிச்சுருப்பேன் நீங்க விளையான்டாத விட கொஞ்சம் அதிகமா விளையான்டிருப்பேன் நீங்க திருடி தின்ன மாங்காய விட ஒன்னு அதிகமாவே திருடி இருப்பேன் ஓ மன்னிச்சுடுங்க நீங்க திருடி தின்னது இல்லையா ....?
பொழுது சாய எப்போடா மனியடிப்பனுங்கன்னு இருக்கும்..? முதல் ஆளா வீட்டுக்கு ஒடிவர்ரதுல அவ்ளோ சந்தோசம்... அப்படி வந்தாலும் நமக்கு முன்னாடியே ரெண்டு பேரு வந்துருப்பானுங்க கடைசி பீர்டு பீடி பீர்டாம்.... வேலிய தாண்டி வந்தத சொல்லி வயிதெருசல கிளப்புவாய்ங்க..................தொடரும்.....
இதுல எங்க கலாச்சார சீரழிவு இருக்குனு நினைக்கிறீங்களா சமுதாயம்னா நானும் சேர்ந்ததுதானங்க..? என்னை பற்றி சொன்னாவே போதும்னு நினைக்கிறேன் வரப்போற நிகழ்ச்சிகள்ல அத நீங்களே தெருஞ்சுக்குவீங்க..! ......
Monday, February 10, 2014
மனிதன் என்னும் ஓர் விலங்கினம்-2
எங்க கிராமம் ஒரு மலையடிவாரம் மலை பெருசா இருந்தாலும் பேறு சிறுமலைதான் நல்ல குளிர்ச்சியான மலை குட்டி கொடைகானல்னு செல்லமா சொல்வோம் வானுயர்ந்த மரங்கள் நிறைஞ்சிருக்கும் அங்கிருக்கும் ஒருசில ஓடைகளில் வருடம் முழுவதும் தண்ணீர் வந்துகிட்டே இருக்கும் அதிகமா காபிகொட்டை மிளகும் விளையும், கெலையாடு மானு காட்டுகோழிங்க காட்டெருமைங்க காட்டுபன்னிங்கனு சுத்தி பார்க்க போறவங்களுக்கு நிமிசத்துக்கு நிமிஷம் திகிலான சந்தோசம் தரக்கூடிய மலைங்க, அங்க கிடைக்கிற எல்லாமே மருத்துவ குணம் நிரஞ்ச பழங்கள்தான் சிறுமலை பலா வாழைன்னா தமிழ்நாடு முழுசும் பிரபலம் , அந்த மலை தெருஞ்சும் தெரியாமலும் பல லட்சம் மனிதர்களை வாழ வைக்கிறது , நாங்க பசங்க நாலு பேரு சேர்தொம்னா மலைக்கு போறதுதான் அடுத்த வேலையா இருக்கும் பலாபழம் பருச்சு திங்கவும் காட்டுவிலங்குகளை மறஞ்சு நின்னு பார்குரதும் காட்டெருமை எங்க பக்குதுல உரசிக்கிட்டு போச்சுன்னு வந்து பெருமையடிக்கிறதும் ரொம்ப சகஜம் , காட்டுக்குள்ள வழி தவறிட்டா பாதைய கண்டுபிடிச்சு வர்றதுக்குள்ள ஒருநாளே முடுஞ்சுடும் மறுபடியும் எப்படா மலைக்கு போவோம்னு கூட்டு சேர்ந்து பேசுறதே தில்லா சந்தோசமா இருக்கும் , அடிவாரத்துல எங்க ஊர் இருகிறதால எப்பவும் குளிர்ச்சியா இருக்கும் ஒரு இளநீர் பறிச்சா ரெண்டு மூனுபேரு குடிக்கணும் ஒருத்தர் மட்டும் குடிச்சு தீர்க்க முடியாது , கினதுலதான் குளிப்போம் குளிக்கும்போது ஒவ்வொருமுறையும் ஒரு விளையாட்டா இருக்கும் , ஆழ்துளை கிணறு ஒருசில தொட்டங்கல்ல இருக்கும் 50அடி 100அடில தண்ணி இருக்கும் காரணம் அந்த சிறுமலைதாங்க , கள்ளசாராயம் தெரியுமா அதோட தலை நகரமே சிறுமலைதான் கவெருமெண்டு அனுமதிச்சா நல்ல சாராயம் அனுமதியில்லாம வித்தா அது கள்ளசாராயம் , அது காய்சவே மலையில தனி இடம் இருக்கும் , சாராயம் காய்ச்சி வாழ்ந்த குடும்பம் பத்து கெட்ட குடும்பம் பத்துனு ஏதோ நடக்கும் , அவனுங்கள அவனுங்க அனுமதி இல்லாம பிடிக்கவே முடியாது , கொஞ்சம் காட்டுக்குள்ள ஓடி மரஞ்சாலும் கண்டு பிடிக்கவே முடியாது மலை சம்மந்த என்னோட அனுபவம் மட்டும் எழுதனும்னா 200 பக்கம் தாண்டும் , ஆகா இப்படி ஒருமலையா அதுவும் திண்டுக்கல் பக்கத்திலையானு பார்க்க கிளம்பிடாதீங்க , நான் சொன்னது எல்லாமே ஆறேழு வருசத்துக்கும் முன்னால, ஏன் இப்போ மலை இல்லையானு கேக்கிறீங்களா.. மலை இருக்குங்க நான் சொன்ன அடையாளம் எதுவுமே இல்லைங்க , யாரோ தனியாராம் அவுங்க ஆக்கிரமுசுட்டான்கலாம்... மரங்களை எல்லாம் யாரோ உளுத்து போன மரம் வெற்றேன்னு.. கவெருமெண்ட ஏமாத்தி 4000ஆயிரம் ஏக்கருக்கு மேல இருந்த மரத்தையெல்லாம் திருடிட்டு போயிட்டாராம் ... சுத்தி பார்க்க நின்னு சுத்தவே இடம் இல்லைங்க காட்டுவிலங்கு பாக்க காட்டெலி கூட இல்லைங்க .. எங்க ஊர்லயும் ஒருத்தர் இளநீர் சாபிடனும்னா ஐந்து இளநீ வெட்டனும் அவ்ளோ சிறுத்து போயிருச்சு அந்த மலை மாதிரியே ... எல்லோருடைய தொட்டதுளையும் ஆழ்துளைகிணறு இருக்கு ஆனா தண்ணிதான் இல்லை 1000 அடி 2000 அடி போய்கிட்டே இருக்கு...
............................................................................................................................................ தொடரும்
Friday, February 7, 2014
மனிதன் என்னும் ஓர் விலங்கினம்
ஆனா தனியா பேசிக்காத மனிதனே இல்லை என்பதுதான் உண்மை எல்லோரும் எதோ விதத்துல தான் சொல்ல நினைத்து
சொல்லாமல் விட்டதையோ அல்லது சொல்ல நினைப்பதையோ தனியாக ஒரு முறை சொல்லி பார்த்துக்கொள்கிறோம்
அது ஒரு நம்பிக்கை சொல்ல வேண்டியவர்களிடமே சொல்லிவிட்டதாக ஒரு நம்பிக்கை
டெலிபதினு சொல்லிக்கிற விசயமாகூட இருந்திருக்கலாம் இப்போ அதுமேல நம்பிக்கை இல்லாம போயிருச்சு அதனால
அது உண்மை இல்லை நிருபிக்க முடியலை . தொலைபேசியில தனியா பேசிக்கிறோம் நாம பேசுறது அவங்களுக்கு கேட்கும்னு
நம்புறோம் அதுவும் நடக்குது , அதை விஞ்ஞானதுலவிளக்க முடியும் ஆனால் அந்த விஞ்ஞானம் முற்றும் மனிதனால் உருவாக்க பட்டதா
இயற்கையிலேயே இருக்கும் சில விசயங்களை இயற்க்கைக்கு மாறாகவோ அல்லது இயற்கையோடு இணைந்தோ சில மாற்றங்களை
சேர்க்கைகளை செய்யும் பொது மறைத்திருந்த இயற்க்கை கண்ணுக்கு புலனாகிறது , இப்போ நாம தெரிஞ்சுக்கிட்ட விஷயம்
சாத்தியமே இல்லை என்று எதையும் சொல்ல முடியாது , அதற்க்கு பதிலாக இப்போ அதுமாதிரி இல்லை '
நாளை நடந்தாலும் நடக்கும் அதற்கும் தெளிவான விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கலாம் ,
மனிதன் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதாவது ஒன்றை பிரதான பொருளாக நினைத்து அதை அடைய உயிரையும் பனையமாக
வைத்து போராடி வருகிறான் , முதலில் உணவு பிறகு இடம் இடம் சார்ந்த மக்கள் மக்கள் சார்ந்த பொருட்கள் (தங்கம் இன்ன பிற )
இப்போது பணம் என்கின்ற ஒன்று , இது வரை இயற்கையை ஆட்கொண்டு அதற்காக போராடி அதை வளர்ச்சியின் பாதையில்
கொண்டு சென்ற மனிதன் இயற்கையை மறந்து தான் கண்டு பிடித்த பணம் என்கின்ற பொருளையே பிதானமாக கொண்டு
அதற்காக இயற்கையை பணையம் வைக்கிறான் அழியும் பொருள்மேல் பற்று கொண்டு தானும் தன்னை சுற்றியுள்ள
இயற்கையையும் அழிக்கிறான் (அழித்துவிட்டான்) எது மனிதன் வாழ தேவையானது என்று தெரியாமல் போய்விட்டது
தன்னுடைய சந்ததி மகிழ்ச்சியாய் வாழ எது தேவை என்று தெரியாமல் மனிதன் மதி மயங்கி கிடக்கிறான்
தான் செய்யும் தவறுகளால் தனது சந்ததியே அழியும் என்று அறியாமல் செய்கிறான்
நான் என்னால் கண்டு என்னுள் அனுபவித்த என் மூளை வளர்ச்சிக்கு தகுந்த சிந்தித்த சில விசங்களை உங்களோடு
பகிர்ந்து கொள்ள நினைக்கிறன் காண்பீர்கள் என்ற நம்பிக்கைதான் , நீங்கள் காணாது போனால் நானும் ஒரு பைத்தியமே ...
தொடரும்
Wednesday, February 5, 2014
கொல்வதுதான் இறுதித் தீர்வா?
தொடர்புக்கு: hkinneri@gmail.com